Thursday, August 31, 2006

30 : விளையாடலாம் வாங்க

Photobucket - Video and Image Hosting

ஏலேய் கோகோ, வ.வா.சங்கத்த நடத்திட்ருந்தாகள்ளா அவிய எதுனா நல்ல காரியம் பண்ணலாம்னு தமிழ்ச்சங்கம் ஒண்ணு ஆரம்பிச்சுருக்காங்க தெரியுமுல்ல...

தெரியும் அண்ணாச்சி... இந்த கொள்ளைக்காரங்கெல்லாம் சேந்து பள்ளிக்கொடம் நடத்துவாகள்ளா அப்படி நக்கல் பண்றவுகள்ளாம் சேந்து நல்ல காரியம் பண்ணுதாகன்றீங்க...அப்படித்தானே

நீ ஏம்டே இப்டிலாம் நெனைக்கித...நெசமாலுமே நல்ல காரியம்தாம்ல பண்றாக. கவித போட்டி நடத்துதாகடே சங்கத்து சார்பா

என்ன கவித போட்டியோ... சரி வீட்டுக்கு வெள்ளயடிச்சுருக்கீரு ஏதோ தங்கப்பதக்கம் வாங்குனது மாதிரி பதக்கத்த தொங்க விட்ருக்கீரு நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லலயே

எம்புட்டு நாளைக்குதான் ஒரே மாதிரியா வச்சுருக்றது அதான்... இனாமாத்தானே கெடைக்குதுன்னு வார்ப்புரு ஒன்ன வாங்கி மாத்துனேன்... இதுக்கென்ன உனக்கு பந்தப் போட்டு பால் காய்ச்சனுமா

அது சரி நம்மதான் ஃப்ரீயா குடுத்தா பெனாயிலக் கூட குடிப்பமே...

அடி சவத்துமூதி... ஒங்கூட எப்பவுமே இப்டித்தாம்ல சொல்ல வந்த சேதிய சொல்லவுடுறியா பாரு

சரிண்ணே சொல்லுங்க... கவித போட்டி வச்சுருக்காக... இன்னுமிருக்கு ஆகாசம்-னு அட்டகாசமான தலைப்பு... ஆனா இன்னிக்குதான் கடைசி தேதி :-( செறந்த கவித எதுன்னு எடுத்துக்குடுக்க வாறாரு கவிஞர் மு.மேத்தா..ம்.. அப்புறம்

அட இங்க பார்றா தெரியாது தெரியாதுன்னு சொன்னானாம் சின்னமாடன்...ஆமம்மா ரெண்டாவது அடுக்குல பாக்கலன்னானாம் வெண்ணமாடன்! எல்லாத்தயும் தெரிஞ்சுகிட்டுதானா எனக்கு வெளாட்டு காமிச்ச

ஏண்ணே இது ஒன்ற மாச பழஞ்சேதி இதப்போய் நீட்டி மொழக்குதீரே

இல்லடே நானும் ஒரு போட்டி வைக்க்ப் போறேன்!

என்னது நீரு போட்டி வைக்கப் போறீரா... எப்டி நாங்கெல்லாம் ஊருல இருக்கலாமா வேணாமா? சரி சரி சத்தமா சொல்லாதீரும்வே கேக்குத எவனும் வாயால சிரிக்க மாட்டான் பெறவு

இந்த சேட்டைக்குதானே நீ செருப்படி வாங்குறது ஊருக்குள்ள... ஏம் வாயக் கிண்டாதடே,
போட்டி இதுதான் சொல்லிப்போடறேன். தமிழ்சங்கத்துல கவிதை எழுதி இருக்காகல்ல அங்க அவுக எழுத்த வெச்சே யாரு எழுதுனதுன்னு கண்டுபிடிக்கனும்!

1. கோயிந்து
2. வேதாளம்
3. அணிலு
அப்டின்னு எழுதி இங்கன ஒரு பின்னூட்டம் போட்டுட்டாகன்னா போதும். முடிவு தெரிஞ்சதும் யாரு நெறய சரியா எழுதிருக்காகளோ அவுகளுக்கு ஒரு பரிசு!

அப்புறம் முதல் பரிசு எந்த ந(ம்)பர்க்குன்னு சொல்லி அது சரியா இருந்தாலும் மற்றொரு பரிசு!


பரவால்லவே சிந்திக்றீரு! நல்ல போட்டிதான், நான் கண்டு பிடிச்சுட்டு வந்து பேசிக்கிறேன். பரிசு என்னத்த குடுத்துறப் போறீரு... எச்சக் கையால காக்காவயாவது ஓட்டுமய்யா இல்ல நாய் வந்து நக்கீரப் போகுது

வ்வ்வ்வர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா!

19 comments:

பொன்ஸ்~~Poorna said...

ராசுக்குட்டி,
பதில் சொல்றவங்க ஏற்கனவே அந்தக் கவிதையை எழுதினவங்க பேரோட சேர்த்து பார்த்திருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?

இலவசக்கொத்தனார் said...

//இந்த கொள்ளைக்காரங்கெல்லாம் சேந்து பள்ளிக்கொடம் நடத்துவாகள்ளா அப்படித்தானே//

:-D

ராசுக்குட்டி said...

பொன்ஸ் -> எழுதியவர் பெயர் அங்கே கிடையாது... கீழே வரும் பெயர்கள் கவிதை/படைப்புகளை பதிவேற்றம் செய்தவர்களே!
அவ்ளோ ஈசியாவா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணுவோம் ;-)

இ.கொ -> சொம்மா டமாசு ஹி..ஹி

இளா -> வெளாட்டுக்குதான், வ.வா சங்கத்துல இருந்து இப்டி ஒரு சங்கம் ஆரம்பிச்சீக சரி நேத்து இரவு வரை 18 பதிவுகளுக்கும் சேர்த்து 18 பின்னூட்டங்கள்தான் வந்திருந்தன, அந்த ஆதங்கத்தில்தான் எழுதவே உட்கார்ந்தேன்...
மன்னிக்கவும், அந்த வார்த்தைகள் நகைச்சுவைக்கு இடமளிக்கவில்லை என்றால்!

ILA (a) இளா said...

ராசு குட்டி நன்றிங்க.
நக்கல் சிபி இருக்கே இன்னுமொரு நக்கல் பார்ட்டியா வளர்ந்து வரீங்க. நல்ல எழுத்துக்களும் கூட.
//கொள்ளைக்காரங்கெல்லாம் சேந்து //
சிரிக்க வெச்சு மனசுகளை கொள்ளை அடிக்கிறோம்ன்னு சொல்லி எங்களை பாராட்டிய விதம் அருமை. அதுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

ராசுக்குட்டி said...

இளா-> இத இதத்தான் எதிர்பார்த்தேன்! வ.வா சங்கத்துக்கே உரிய 'நீ என் இனமடா' tone!

எனினும் என் பதிவில் சிறு மாற்றமொன்று செய்து விட்டேன்!

சிபி கூட அப்பப்ப கதைப்பதில் ஒட்டிக் கொண்டுவிட்டதென்று நினைக்கிறேன்!
நன்றிகள் மற்றபடி

பொதுவாக -> தமிழ்ச் சங்கத்தை விளம்பரப் படுத்தலாம் என்றுதான் இப்பதிவை இட்டேன். என் நோக்கம் அடி பட்டுப் போய்விட்டது இரு காரணங்களால்...
* தமிழ்ச் சங்கம் சார்ந்தவர்களையே சில வார்த்தைகள் காயப்படுத்தி
விட்டன
* என் பின்னூட்டங்கள் தமிழ்மணத்திரட்டியில் வரவில்லை நேற்றிலிருந்து! :-(

என்ன செய்யலாம்... தப்பித்தவறி யாராவது என் பக்கத்திற்கு வந்தால் யோசனை சொல்லுங்களேன்!

ILA (a) இளா said...

//என் பின்னூட்டங்கள் தமிழ்மணத்திரட்டியில் வரவில்லை நேற்றிலிருந்து//
Template'ஐ சரி பார்க்கவும். இது blogger அல்லாத template உபயோகப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினை இது.

கைப்புள்ள said...

ஆட்டத்துல நாங்களும் சேர்த்திங்களா?

ராசுக்குட்டி said...

நன்றி இளா, பார்க்கிறேன்!

கைப்பு வாங்க வாங்க... நீங்க வராமத்தான் ஆட்டமே ஆரம்பிக்காம இருக்கு!

ராசுக்குட்டி said...

எல்லாம் சரி, ஆனா இன்னும் போட்டிக்கு ஆளே வரலயே!

(ஒரு சோதனைப் பதிவுதான் ஹி ஹி)

ராசுக்குட்டி said...

வெட்டிப்பயலுக்கு நன்றி... மறுமொழிகள் தமிழ்மணத்தில் வர உதவியதற்கு!

சரி இனிமேலாவது விளையாட வரலாம்ல மக்களே...

இன்னோரு தடவ கோகோ-வ மைக் செட் கட்ட வச்சுராதீக...அம்புட்டுதான் சொல்லுவேன்!

நாமக்கல் சிபி said...

ராசுக்குட்டி,
ஐடியா மணியே உங்ககிட்ட தோத்துட்டாரு...

இந்த போட்டில கலந்துக்கறதுக்கு முதல்ல 18 பதிவுகளையும் நல்லா படிக்கனும்...

பரிசு என்னனு சொல்லலையே!!!
(பட்டம் கிட்டம் கொடுத்துடாதீரய்யா :-))

படிச்சிட்டு வரேன் ;)

ILA (a) இளா said...

//பரிசு என்னனு சொல்லலையே!!! //

ரகசியமா வெச்சுக்கலாம்னு இருக்கோம். அப்பால சொல்லுவோம், ஒரு அதிர்ச்சி குடுத்து

Anonymous said...

//எச்சக் கையால காக்காவயாவது ஓட்டுமய்யா இல்ல நாய் வந்து நக்கீரப் போகுது//

என்ன பரிசுன்னு சொன்னாதான் களத்துல குதிப்போம்!

Anonymous said...

கவிதை 6 எழுதினவரு கவுஜ சங்கத்தில இருந்து இருக்கலாம்!

கவிதை 12 கலாய்ச்சல் திணை ஆளா இருப்பாருன்னு பார்த்தேன், சங்கத்து ஆள் இல்லையென்பதால்... நல்லா சிந்திச்சுட்டு வர்றேன்!

பரிசெல்லாம் தயார் பண்ணி வைங்க!

ராசுக்குட்டி said...

வெட்டி-> நீங்கள்லாம் இருக்கும் போது நமக்கு ஐடியாவுக்கா பஞ்சம்!

இளா -> கரீட்டா சொன்னீங்க

அப்பா, அனானி1 -> சந்தேகப் படாதீங்க அவ்ளோ கஞ்சமில்லை நான்!

அனானி2 -> நீங்கள் ஜெயித்தாலும் பரிசை எப்படி கொடுப்பது??!!

அப்புறம் வரலாறு தெரிந்தவர்கள் 'கவுஜ' சங்கத்துல யார் யார் இருக்கான்னு சொன்னா அடுத்து வர்றவங்களுக்கு புண்ணியமா போகும். நான் "ஆசிப்" அண்ணாச்சி மட்டும்தான்னு நெனச்சிகிட்டு இருந்தேன்!

Unknown said...

ராசு கைப்புக்கு யார் எழுதுனான்னுத் தெரியும்ய்யா.. அவர் ஆட்டத்தில்ல சேத்துகிட்டா என்னையும் சேத்துக்கணும் சொல்லிபுட்டேன்....

கைப்புள்ள said...

//ராசு கைப்புக்கு யார் எழுதுனான்னுத் தெரியும்ய்யா.. //

அவரு உன்னை கேட்டாரா இல்ல கேட்டாராங்கிறேன். கவிதை தான் எழுதி பிரைசு வாங்க முடியல இப்பிடி எதாவது பண்ணி ஒன்னுலேருந்து பத்துக்குள்ள நம்பர் வாங்கிக்கலாம்னு டிரை பண்ணா அதுலயும் மண்ணள்ளி போடுறியே?

ராசுக்குட்டி said...

தேவ் -> ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆமால்ல அத யோசிக்க மறந்துட்டேன்! சங்கம் சார்ந்தவுகளை ஆட்டத்துக்கு சேத்துக்கரதில்லன்றது இந்த நாட்டாமையோட தீர்ப்பு...அவுகளோட அன்னந்தண்ணி பழக்கம் வச்சுக்கரவுகளையும் ஊர வுட்டு ஒதுக்கி வைக்கிறாரு இந்த நாட்டாமை!


சரி சமூகத்துகிட்ட ஒரு சின்ன விண்ணப்பம் இந்த ஆட்டத்துக்கு சங்கம் உதவலாமே, எழுதின எல்லோருடைய பெயரையும் கொடுத்தால் 'அபி' சொன்னது மாதிரி match the following போடலாம்!

ராசுக்குட்டி said...

ஆமாம்! அதுக்கென்ன பண்றது... இன்னோருக்கா விளம்பரம் பண்ண சொன்னா கோகோ வேலய விட்டு போயிடுவான்

officially declaring the game closed...

பெப்பர....பெப்பர... பாம்