Monday, August 21, 2006

21 : கோகோ ஒரு தீர்க்கதரிசி

Photobucket - Video and Image Hosting

என்னண்ணே... நல்லாருக்கீகளா? பாத்து ரொம்ப நாளாச்சு வேலைப் பளு ரொம்பவோ

வாடே கோகோ, வேலை கொஞ்சம் அதிகம்தான்... சரி என்ன குதியாட்டம் போட்டு வார சொன்னா நாங்களும் சந்தோசப்படுவமில்ல

சொல்றேன்... ஆனா சொன்னா நீங்க வருத்தம்தான் படுவீக

ஏலேய் எட்டிகிட்டு மிதிச்சம்னா எங்கிட்டு போய் விழுவன்னு எனக்கே தெரியாது... விஷயத்த சொல்லுடேன்னா... பீடிகை போடுறாரு தொர

அண்ணாச்சி ஏன் இம்புட்டு கோவம், நம்ம தேன்கூடு போட்டி முடிவுக்கு வந்துருச்சுல்லா, மொத்தம் 84 பதிவு வந்துருக்கு தெரியுமா?

அதுக்கென்னடே நல்ல விஷயம்தானே... இந்த தடவை படைப்புகளெல்லாம் பிரமாதமா இருந்துச்சு... ஆனா உனக்கும் அதுக்கும் என்னலே சம்பந்தம்... நீ எழுத்துக்கூட்டி படிக்குறதுக்குல்ல ஏஞ்சென்மமே முடிஞ்சுருமே

இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல... நம்மள அறிமுகப்படுத்துறப்ப இதப் பத்திதான் பேசுனோம் ஞாபகம் இருக்கா? சரி நீங்க மறந்தா மாதிரி நடிப்பீங்க... நானே சொல்றேன் நான் போன மாசம் மாதிரியே 80 பதிவுகள்தான் வரும்-ன்ற அர்த்ததுல சொன்னேன் நீங்க என்னடான்னா 110 வரும்னு சொன்னீயள்ள... மறந்துட்டா?

ஹா...ஹா! அடக் கோட்டிக்காரப் பயலே, சரி ஒத்துக்கரேம்ல நீ ஒரு தீர்க்கதரிசிதாம்னுட்டு! நெறயா பேரு ஊர் தேசத்த பாக்க போயிருக்கங்கள்ளா அதுனால கூட எண்ணிக்கை எதிர்பார்த்தத விட கொறஞ்சுருக்கலாம்... நானே எழுதனும்னு நெனச்ச ரெண்டு கதய நேரம் இல்லாததுனால எழுத முடியல தெரியுமா?

நொண்டிக் கழுதைக்கு சறுக்குனதுதான் சாக்காம், எங்க ஆத்தாகூட அடிக்கடி சொல்லும்!
அது சரிண்ணே போட்டிதான் முடிஞ்சுருச்சே, ஓட்டு போட்டாச்சா?


பாசக்கார பயடா நீ, ஓட்டெல்லாம் போட்டாச்சு, நமக்கு பிடிச்சதுக்கு எல்லாம் போட்டுபுட்டேன். எலேய் நீ போட்டியா ஓட்டு அண்ணனுக்கு... என்னோட பிரச்சார பீரங்கியே நீதாம்ல, அண்ணன செயிக்க வைக்க என்ன பண்ணப போற

நமக்குதான் ஓட்டே இல்லியே... இல்லின்னாலும் என்ன "பிரச்சார பீரங்கி"ன்னு வேர சொல்லிட்டீங்க மைக் செட்-லாம் போட்டு ஒரு கலக்கு கலக்கிபுடலாம். ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம்னே, முந்தாநேத்து கோலிவுட் இசைவிழாவுக்கு நம்மள கூப்டாம போயிட்டீங்கள்ள. ரம்யா கிருஷ்ணன்லாம் வந்துருந்தாங்கலாம்ல!

ஜொள்ளொழுக்கி கிட்டே இருக்காதல... தங்க கோட்டைன்னு ஏதோ இம்சை பண்ணிகிட்டு இருந்தாவ, பணங்காசு ஒழுங்குமுறையா பைசல் பண்ணலயோ என்ன கழுதையோ அம்புட்டு ஒண்ணும் சொகப்படல...

என்ன பொசுக்குன்னு இப்டி சொல்லிப்போட்டீக... சினிமா பாடகர்கள் நெறய பேரு வந்துருந்தாங்கலாம்ல

நமக்கு பாடும் நிலா பாலு வரலைன்னதும் சொணங்கிப் போச்சு, இருந்தாலும் சங்கர் மகாதேவன் கொஞ்சமா ஈடு செஞ்சுட்டுப் போனாரு, சின்னக் கலைவாணரு கொஞ்சமா கலகலப்பூட்டுனாரு. மத்தபடி இசைக்குழு 'திண்டுக்கல் அங்கிங்கு'ன்னு ஏதோ சொன்னாக...எப்பவுமே அப்படியா இல்ல அன்னிக்கு மட்டும் அப்படியான்னு தெரியல கொஞ்சம் இம்சைக்குழுவாத்தான் இருந்துச்சு!
அப்புறம் நம்ம சின்னக்குயில் சித்ராவும் வந்துருந்தாக என்னா குரல், என்னா பணிவு, ஆறு தடவ தேசிய விருது வாங்கிருக்காகலாம்...நூறே கொடுக்கலாம்டே.

நீங்க ஏதோ பாட்டுக்கு ஆடுனதா சொன்னாவளே ஊருக்குல்ல...

ஆடுனா நல்லாத்தான் இருந்துருக்கும்ல, கூட்டத்த கட்டுக்குள்ள வைக்குறதுக்குன்னு வந்த நம்மூரு புள்ள ஒண்ணு அம்புட்டு அம்சா இருந்துச்சு, அனுராதா ஸ்ரீராம் வேற 'கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு'ன்னு அழகா பாடுச்சு... எலந்தப்பழ பாட்டுக்கு கண்டிப்பா ஆடியிருக்கலாம் ஆனா நமக்கு தோதா சேக்காளிக இல்லாம போய்ட்டாக, அது சரி மூதி ஒனக்கு யாரு இதெல்லாம் சொல்லுதா

அண்ணாச்சி நமக்கு ஆயிரங்காது, ஆயிரங்கண்ணு... நீங்க சொல்லாட்டி எனக்கு எதுவும் தெரியாதுன்னா நெனச்சீக...

ஒனக்கு ஆயிரம் வாயும் இருக்குல... சரி ட்ரம்மர் சிவமணி-ய பத்தி ஒரு பயலும் ஒங்கிட்ட சொல்லலயா? சும்மா ஒரு 10-15 நிமிஷம் கலக்கிப் புட்டாரு, சங்கர் மகாதேவனும் அவரும் சேந்து போட்ட 'பிட்'ம் அட்டகாசமா இருந்துச்சு. பாடும் வயலினும் வந்திருந்தார், ஆனா அவருக்கேனோ தனி நேரம் ஒதுக்காம வுட்டுப்புட்டாக, ஹரிணிக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லயோ என்னமோ... மத்தபடி திப்பு, ஸ்ரீநிவாஸ், பின்னி கிருஷ்ணகுமார், இசைக்குழுவிலிருந்து கிருஷ்ணா கண்ணா எல்லாரும் நல்லா பாடுனாங்க

என்னண்ணே இம்புட்டு நல்ல விஷயம் இருந்திருக்கு, அப்புறம் புடிக்கலன்னு சொன்னிகளே ஏன்?

அதில்லடே 6:30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி 7:45க்குதான் ஆரம்பிக்குது, சம்பிரதாயத்துக்கு ஒரு மன்னிப்பு கூட கேக்கலடே... காசுகுடுத்து வந்தவனெல்லாம் என்ன கேணமாக்கானா? அப்புறம் பொன்னாடை போர்த்த, காசு குடுத்த கம்பெனிக பேரெல்லாம் விளம்பரப் படுத்துறதுன்னு... நம்ம ஊரு ரசிகர்மன்ற கலைவிழா தோத்தது போ!

கோவம் வருத்தம்லாம் மறக்குறதுக்குதான் பாட்டு கேக்க போறது...நீங்க என்னடான்னா பாட்டு கேக்க போனதுனால கோவமா வந்துருக்கீக... தண்ணி நெறய குடிங்கண்ணே!

வ்வ்வ்வர்ட்ட்ட்டா....

2 comments:

Anu said...

enna irundhalum cocova vittuttu poyirukka koodadu rasu

ராசுக்குட்டி said...

அனிதா -> இனிதான் கோகோ உங்க பாய் ஃபிரெண்ட் ஆச்சே... நீங்களே கூப்ட்டு போய்க்கோங்க!