56 : கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு - தகவலறிக்கை
நண்பர்களே உங்கள் அனைவரிடமும் அளவளாவி அனேக நாட்கள் ஆகிவிட்டது எனவே முதலில் வணக்கம், அனைவருக்கும்!
அடுத்து சாஷ்டங்கமாய் வுளுந்து மன்னிப்பும் கேட்டுர்றேன்... கோவை வலைப்பதிவர் சந்திப்பை பெரிய அளவில் நடத்தமுடியாமல் போனதற்கு. சின்னதோ பெரிதோ நடந்ததை தமிழ்கூறும் வலையுலகின் பார்வைக்கு வைக்கின்ற மரபிற்க்கேற்ப...இதோ!
ஏதோ பழைய ஞாபகத்தில் லாலி ரோடு, அரோமா பேக்கரின்னு போட்டாச்சு, எதேச்சையா அந்தப் பக்கம் போய் பார்த்தா அரோமா ஆராதனா-வா மாறிப்போச்சு. இதென்னடா பெரிய குளறுபடியா போச்சேன்னு கணிணி மையத்திற்கு ஓடியாந்து வர்றேன்னு சொன்னவங்க பேரெல்லாம் பார்த்து தனிமடல் போட்டு தொலைபேசி எண் வாங்கி ரயில்நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள கே.ஆர்.பேக்ஸ்க்கு சந்திப்பு மையத்தை மாத்தியாச்சு. அப்புறமும் ஒரே உறுத்தல் யாரும் நேரா லாலி ரோடுக்கே போய் ஏமாந்து வந்துருப்பாங்களோன்னு??!! ஒரே ஆறுதல் இதுவரைக்கும் யாரும் அப்படி மடலிட்டு திட்டாதது.
அடுத்தது என்னுடைய கைப்பேசி எண்ணை தெரிவிக்க முடியாமல் போனது அதனால் வரவேண்டுமென்று நினைத்தவர்களுக்கு இலகுவான தொடர்பு என்பது இல்லாது போயிற்று. இந்தக் குறைகளையும் மீறி சந்திப்புக்கு வருவதாய் சொன்னவர்கள்
புதுமாப்பிள்ளை ராசா
நாமக்கல் சிபி
குமரன் எண்ணம்
சுப்பையா வாத்தியார்
ப்ரியன்
சுதர்சன்.கோபால்
முரட்டுக்காளை
கோவை.ரவீ
சம்பத்
ப்ரியன் சேரநாட்டுக்கு திடீரென பயணிக்க வேண்டியிருந்ததாலும், எதிர்பாரா விருந்தினர் வருகையால் சுதர்சன்.கோபால்-ம் வரமுடியாது போயிற்று. முரட்டுக்காளை, கோவை.ரவீ, சம்பத் ஆகியோரை தொடர்பு கொள்ள விட்டுப்போனதால் அவர்களையும் சந்திக்க முடியாது போயிற்று அன்றைய தினத்தில். மேலும் சிலரும் கலந்துகொள்வதாய் இருந்து கடைசிநேரத்தில் முடியாது போயிற்று.
குமரன் எண்ணம் முதலில் ஆஜர்-ங்கோன்னாரு அப்புறமா கோவை ரெமோ - ஜெமோ சிபியும் சேர்ந்தார். பிரம்புகளை உடைக்கிற கண்டிப்பான வாத்தியார்கள் மத்தியில் நம்ம சுப்பையா வாத்தியார் ரொம்ப அன்பானவருங்க. தீபாவளி பலகாரங்களோடு அன்னிக்கு என்ன பேசலாம்-ன்ற அஜெண்டாவோட வந்தாரு. பல நல்ல காரியங்கள் பண்ணிக்கிட்டு இருக்காரு அதெல்லாம் பத்தி சொல்லிட்டுருந்தாரு. அஜெண்டாவோட வந்தவரு அதையெல்லாம் பத்தி பேசறதுக்குள்ள அர்ஜெண்டா கிளம்பிட்டாரு.
இன்னோரு டீ அடிச்சு முடிச்ச நிமிஷத்துல ராசா மல்லு வேட்டி கட்டி மாப்பிள்ளையா வந்தாரு. பல சரித்திர நிகழ்வுகளை சொல்லி தமிழ் மணம்வீசும் வரலாற்றுப் பாடம் எடுத்தாரு. குமரன் எண்ணத்திற்கும் - குமரனுக்கும் இடையே அடிக்கடி குழப்பிக்கிட்டேன் நான். நாமக்கல் சிபியும் பல விஷயங்கள் சொல்லிட்டுருந்தாரு. மறுக்காவும் டீ குடிச்சிக்கிட்டோம்.
மொத்தம் 60-70 மணித்துளிகள் நீடித்த சந்திப்பு எல்லாருக்கும் மனநிறைவை தந்ததாகவே நினைக்கிறேன். கடைசியா ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொண்டோம். (வாத்தியாரய்யா தந்த தீபாவளி பலகாரம் கடைசியா யார் கைக்கு போச்சு...என்ன இருந்துச்சு..எப்படி இருந்துச்சு) எல்லாருமே பொதுவா சொன்ன சில கருத்துக்கள்
* தனிமனித தாக்குதல்களை ரசிக்கமுடிவதேயில்லை
* கருத்து சுதந்திரத்திற்கும் வரையறைகள் இருக்கின்றன
* மத/இன/ஜாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்குமுன் அவரவர் சுயமதிப்பீடு செய்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்துவிடும்
* டோண்டு Vs போலிக்கு தீர்வாக கருதுவது - "Free-யா விடு மாமே" ன்னு கண்டுக்காம இருக்றதுதான்
நெடுநாள் முன் நடந்ததாலும், என்னுடைய இயல்பான ஞாபக மறதியாலும் இன்னும் சில-பல விஷயங்களை விட்டிருக்கலாம், வந்தோர் பின்னூட்டங்களில் சேர்க்கவும்.
விடுமுறையில் கணிணி பக்கம் நிமிஷக் கணக்கில்தான் செலவளிக்க முடிந்தது மேலும் மூன்று வார விடுமுறையில் வேலைகள் நிறைய சேர்ந்துவிட்டன எனவேதான் இந்த தாமதம். ஏண்டா போட்டிக்கு கதையெல்லாம் எழுத தெரியுது, இந்த சந்திப்ப பத்தி எழுத இவ்வளவு நாளான்னு கேட்பவர்களுக்காக... இன்னோரு தபா, மன்ச்சிக்கங்கபா!
இந்த சந்திப்பை பற்றி நான் என்ன நினைக்கிறேன்?
இதுகாறும் வெறும் பெயர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். இனி அதனினும் மேம்பட்ட திருப்தி கிடைக்குமென்று நினைக்கிறேன்! இனி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள திட்டம்!
அவ்ளோதான் இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!