41 : பின்னூட்டங்களில்லாவிடினும்,இன்னும் இருக்கிறது...
(இந்தக் கவிதை போதிய பின்னூட்டமின்றி தவிக்கும் என் சக வலைப்பதிவர் அனைவருக்கும் சமர்ப்பணம்!)
மறுமொழிகளை மட்டுறுத்தலாம் என்றெண்ணி
பின்னூட்டப் பெட்டி திறந்தேன், ஒரு பின்னிரவில்!
வெறுமை வந்தென் முகத்தில் அறைந்தது
துணையற்ற நெடும்பயணம் போன்று
கடை விரித்தேன் கொள்வாரில்லை...
வள்ளலாரின் வலி புரிந்ததெனக்கு!
இலையுதிர் காலத்து சருகு போலே
பெயரற்று போய் விடும் உயர் நோக்கோடு
வந்து சென்றிருப்பர் பலர்
நான் சென்று வருவதைப் போன்றே
எண்ணங்களை பதிவு செய்யாது
எண்ணிக்கைகளை மட்டுமே
கணக்கில்வைத்துக் கொள்ளும்
என் *'வருகை எண்ணி' , சொல்லிற்று...
கவிதையொன்று வடித்து நிமிருகையில்
கடவுளானேனென கர்வம் வந்து செல்லும்
கண நேரமேயானாலும், அதுவும் சொல்லிற்று
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
கண்சிமிட்டும் நட்சத்திரங்களும்
தேய்ந்து வளரும் நிலவுமில்லாவிடினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்,
இளஞ்செங்கீற்றாய் விடியலுடன்!
*'வருகை எண்ணி' : Hit Counter-க்கான தமிழாக்கமென்றரிக!
படம் : நன்றி முரட்டுக்காளை
ஊக்கம் : நன்றி தமிழ்ச்சங்கம்
71 comments:
கடைவிரித்தேன் கொள்வாரில்லை - அது முன்டாசு கவிஞர் சொன்னது அல்ல
இராமலிங்க வள்ளலார் சொன்னது !
:)
அய்யகோ! எனக்கும் இதே கொடுமைதான் தல
பின்னூட்டம் தானே, வந்துக்கிட்டே இருக்கு...
நான் ஒன்னு போட்டாச்சு...மற்றபடி கழகத்துக்கு தகவல் போயாச்சு...
வந்திட்டோம்..
நன்றி கோவி.கண்ணன் இத்தனை நாள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். கவிதை இப்போது மேலும் அழகாக இருக்கிறார்ப்போல் உள்ளது!
பதிவிலும் திருத்திவிட்டேன், நன்றி மீண்டும்.
நன்றி வேந்தன்... அதுக்காக "தல" நோ உணர்ச்சி வசப்படக்கூடாது!
செ.ரவி : பின்னூட்டத்திற்கு நன்றி... ஆனா அனானிங்க கிட்ட காட்டிக் கொடுத்துட்டீங்களே, நான் தாங்குவனா தெரியல
அனானி - வருகைக்கும்!! நன்றி
//செ.ரவி : பின்னூட்டத்திற்கு நன்றி... ஆனா அனானிங்க கிட்ட காட்டிக் கொடுத்துட்டீங்களே, நான் தாங்குவனா தெரியல//
அனானிகள் ஆட்டம் தொடங்கினாதானே நீர் இருப்பதே மற்றவர்களுக்கு தெரியும்..நல்ல கவிதைகளும் வெளியே வரும்.
kavidhai super
but rasu
comment varadhadunala dane ungalala ivvalavu azhagana kavidhaiye ezhudha mudinjuchu
so am confused
comment podlama vendama...
/// ஆனா அனானிங்க கிட்ட காட்டிக் கொடுத்துட்டீங்களே, நான் தாங்குவனா தெரியல///
காட்டிக்கொடுக்க எங்க தலை இன்னா புரூட்ஸா ? அவர் சீசர்..
////அய்யகோ! எனக்கும் இதே கொடுமைதான் தல////
வேந்தன், உங்கள் பதிவும் அனானிகளின் பரிசீலனையில் உள்ளது. அங்கு நாளை கும்மி அடிக்கப்படும்.
யோவ், எங்கய்யா எமது பின்னூட்டம்
இவர் எங்கேயோ விழாவை சிறப்பிக்க போய்விட்டார் என்று என்னுகிறோம். அதான் பின்னூட்டம் போட்டு இவ்வளவு நேரம் காத்திருந்தும் வரவில்லை. இவருக்கு ஒரு சொம்பு யானைப்பால் கொடுத்து, செத்து செத்து விளையாடினாதான் சரிவரும்.
படம் சூப்பரா இருக்குது.
(நானும் ஆஜர்)
அய்யோ சொல்ல மறந்துட்டேனே...
கவிதையும் சூப்பர்.
:-))
திரும்பவும் மறதி!
ரவி பார்த்துக்கொள்லுவார் என்ற நம்பிக்கையில்.. நான் கொலசாமிகளுக்கு சொல்ல வில்லை.
:-)))
//கடை விரித்தேன் கொள்வாரில்லை//
பரவாயில்லை. நாங்க இங்க சய்டுல கடை விரிக்கலாமா?...
அனானிகள் முன்னேற்ற கழகம்,
மெல்பேர்ன்,
ஆஸ்திரேலியா.
கவிதை நல்லா இருந்ததுங்க. நான் ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் அப்படீன்னு மனசை தேத்திக்கிடுவேன்.
///
kavidhai super
but rasu
comment varadhadunala dane ungalala ivvalavu azhagana kavidhaiye ezhudha mudinjuchu
so am confused
comment podlama vendama...
///
இந்த பின்னூட்டம் சூப்பருங்க எங்கயோ போயிட்டீங்க.
///காட்டிக்கொடுக்க எங்க தலை இன்னா புரூட்ஸா///
யோவ், அது புரூட்டஸ்...ஆப்பிள்/ஆரஞ்சு தான் புரூட்ஸ்..
ஆஹா..இங்கேதான் இருக்கிறீரா நீர்..உம்மை நான் நடத்தும் ஒரு விழாவுக்கு (பங்கேற்க்க) அழக்கலாம் என்று இருக்கேன். வாரீயளா ?
பிறகு அமானுஷ்ய ஆவி சங்கத்தில் சேர்ந்து பின்னூடம் வாங்கலாம்.
////திரும்பவும் மறதி!
ரவி பார்த்துக்கொள்லுவார்....///
என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணல்லியே..
கலக்கல் கவித ராசு!
புதுசா வர்ற எங்கள மாதிரி கத்துகுட்டிங்க நினைக்கிறது எல்லாம் பொதுவில போட்டு உடைச்சிட்டியே தலை!
எனக்கும் இதே நிலைமை தான். என்ன பன்றதுனு தெரியல. யாரும் எனக்கு பின்னுட்டம் அளிப்பதில்லை. ஏன் என்று தெரியவில்லை. தமிழ் மன்த்தில் கூட எனது பதிவு வருவதில்லை. அதன் நிர்வாகி ஒரு பதிலும் எனக்கு கொடுப்பதில்லை.
பாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
////எனக்கும் இதே நிலைமை தான். என்ன பன்றதுனு தெரியல. யாரும் எனக்கு பின்னுட்டம் அளிப்பதில்லை. ஏன் என்று தெரியவில்லை. தமிழ் மன்த்தில் கூட எனது பதிவு வருவதில்லை. அதன் நிர்வாகி ஒரு பதிலும் எனக்கு கொடுப்பதில்லை.
பாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com////
அய்யா, நிரல் துண்டை சேர்த்து, மறுமொழி மட்டுறுத்தல் செய்து, தமிழ்மணத்துக்கு தகவல் அனுப்பினீங்களா ?
பயனர் கையேட்டை படியும் அய்யா..
///balachandar muruganantham///
உமது பதிவிலும் கும்மி அடிக்கிறோம் அய்யா..நீர் எமது ஹிட் லிஸ்டில் மூன்றாவது...
பேசம அனானியாவே கமெண்டு போட்டுக்கினு இருக்கலாம் போல இருக்குது. நீ பிறவி கவிஞன் அப்படீன்னு ஒரு நாதாரி ஏத்திவுட்டதை நம்பி, பிலாகர் கணக்கு துவங்கினா, ஒருத்தனும் பின்னூட்டம் போட மாட்டேங்கிறாங்க..
யோவ் புலம்பல்...
பெரியார் / அண்ணா / கலைஞர் / ஜெ யாரையாவது தூற்றி ஒரு சிறிய பதிவு போடுமைய்யா...
பிறகு பாரும் பின்னூட்டத்தை..
ஏன், விமாண பணிப்பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று சொல்லி பதிவிட்டால் கூட 50 தேறாது ?
வயத்தெரிச்சலா இருக்கு, ஏதாவது மாத்திரை இருக்கா ?
வலைப்பதிவு சந்திப்பு ஒன்றுக்கு சென்று என் ஊத்த வாயை திறந்ததில், அனைவரும் தெறித்துவிட்டார்கள்..
இனி மெங்களூரில் கொலைப்பதிவு நடந்தால், போண்டாவுடன் தான் போவது என்று முடிவெடுத்துவிட்டேன்.
இப்போதான் தாளிக்கிறேன்..பிறகு பீரை ஊத்தி குடுக்கிறேன். கவலை வேண்டாம், மப்புல எல்லாரும் பின்னூட்டம் போடுவாங்க...
நான் கேரளா செல்வதால், உமக்கு எமது உதவியாளர் பின்னூட்டம் போடுவார். ஆனால் ஒரு பிரச்சினை. அவருக்கு தமிழ் தெரியாததால், ஏதாவது ஒரு மொக்கையை காப்பியடித்து போட்டுவிடுவார்..
சம்மதம் தானே ??
என்னுடைய கிங்பிஷன் ஏர்லைன் கம்பெனியை, தன்னுடையது என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தார்.
முகத்தில் பெரியார் முகமூடி.
அவரிடம் சென்று, அய்யா, நீர் யார் என்றேன்.
நான் தான் அய்யா ஓனர் என்றார்.
எனக்கு ஸரியான காமெடி.
//என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணல்லியே..
//
என்ன தல இப்படி கேட்டுட்டீங்க..?
நீங்க எல்லாம் நம்ம ஆளுங்க.., நான் அப்படியெல்லாம் செய்வேனா...
பின்னூட்டத்தை அதிகரிக்க அப்படி திரும்பி வந்து போட்டேன்.
அவ்வளவே!
இவட ஞான் பின்னூட்டம் போடுங்கால் வெந்து..ஈ வல்லிய தமிழ்மணத்தில் ஞான் போடும் வொரு பின்னூட்டம் எந்தா வல்லிய தாக்கம் வெருமா ?
கரலே, கரெலிண்ட கரலே, நிந்தோடொந்து சிரிக்கும், வெருதே நின்னு கினுங்காதே..
மோளே, ஓமனே..ஓ...ஓமணே..முழு பாட்டும் பாடு மோளே, கேட்பம்.
கரலே கரலிண்ட கரலே, நிந்தோ டொந்து சிரிக்கும்...
கிளியே மாரசக்கிளியே, வெருதே நின்னு கினுங்காதே..
ஞானுண்டு ஞானுண்டு உந்தன் கூடா..
எண்ட சினேகிதனானோ நீ..
அவ்வளெவு தானெ தெரியும் எனிக்கு..
ஓமணா அவர்களே, அர்த்தம் சொல்லுங்க.
ஆமாம் ரவி நல்ல கவிதைகள் வெளிவருகின்றன அனானிகளிடமிருந்து
கமென்ட்ஸ் வந்தா வேறெதுவும் நல்லதா வரும்-ல அதுக்காகவாவது.... மறுமொழியிடுங்கள் அனிதா, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிங்க நம்ம பக்கத்துக்கு
வாங்க அனானிங்களா... நான் பாவம் சின்னப்பையன், எனவே கொஞ்சம் பார்த்து...
பாலபாரதி யூ டூ!
கரல் என்பது எங்கள் கேரளத்தில் ஒரு பூ..
மாரசக்கிளி - மனதுக்கினிய கிளி
வெறுதே - வெறுமனே
கினுங்காதே - சினுங்காதே..
வந்து குவியும்
பின்னூட்டங்களை
வாங்கிக்கொள்ளும் வலிமை
கைகளில் இருந்தால்
"இன்னும் இருக்கிறது
ஆகாயம்"
சீக்கிரம்
பின்னூட்டங்களை
பரீசிலித்து வெளியிடாவிட்டால்
உமக்கு கிடைப்பதோ
"ஆ.. காயம்.."
//பரவாயில்லை. நாங்க இங்க சய்டுல கடை விரிக்கலாமா?...
அனானிகள் முன்னேற்ற கழகம்,
மெல்பேர்ன்,
ஆஸ்திரேலியா.//
கடை விரிக்கிறதா... அதான் விரிச்சு எரிச்சுட்டிங்களேய்யா!
////வாங்க அனானிங்களா... நான் பாவம் சின்னப்பையன், எனவே கொஞ்சம் பார்த்து...////
சரி ஐம்பதோட நிறுத்துவோம்.
யோவ், நாங்க வேலை மெனக்கெட்டு பின்னூட்டம் போடுவது, நீர் எமக்கு நன்றி சொல்லி கயமை செய்யவேண்டும் என்பது தான்.
இந்த சிறு கயமை கூட செய்யாத உமக்கு அனானிகள் ஓகோ என்று ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
////சீக்கிரம்
பின்னூட்டங்களை
பரீசிலித்து வெளியிடாவிட்டால்
உமக்கு கிடைப்பதோ
"ஆ.. காயம்.."////
இதுதானய்யா அனானிகளின் திறமை..
///கடை விரிக்கிறதா... அதான் விரிச்சு எரிச்சுட்டிங்களேய்யா!////
போய் உமது புரொபைல் ஹிட்டு பாருமைய்யா..
இனி தரமாக எழுதும்...
இந்த பின்னூட்டம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேனுமா ?
அ.மு.க,
அல்சூர்,
பெங்களூர்
என்ன ராசுக்குட்டி சூட்சுமமே தெரியாது இருக்கிறீகளே. என்னுடைய ஏதாவ்து ஒரு பதிவுக்கு வந்து என்னை அடுத்த முறை ஸந்திக்க ஆசையாக இருப்பதாகப் பின்னூட்டம் போடுங்க. ஒன்றுக்கு பத்தாகப் பின்னூட்ட மழை போலியாரிடமிருந்து சீறி வருமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி குமரன் -> வர்ற ஒண்ணுரெண்டு பேரும் இப்டி சொல்லிட்டு போய்ட்டா (so am confused
comment podlama vendama...) ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் அப்படீன்னு மனசை தேத்திக்கிட வேண்டியதுதான்!
நன்றி தம்பி -> நான் மட்டும்தானோன்னு நினைத்துக்கொண்டுதான் இந்தக் கவிதை எழுதினேன்... நிறையபேர் அதேபோல் நினைத்து அதை சொல்லியிருப்பது //கணநேர கர்வம்// கொடுத்திருக்கிறது.
பாலச்சந்தர் சீக்கிரமே தமிழ்மணத்தில் இணைய வாழ்த்துக்கள் உங்கள் பதிவை பார்த்து பின்னூட்டங்கள் இடுகிறேன்! ரவி சொல்லியிருக்கிற கருத்துக்களை பரிசீலிப்பதும் நல்லது
மற்ற அனானிகள் அனைவருக்கும், சிந்திக்க வைக்கிறீர்கள்.... இப்போதைக்கு சிரித்து வைக்கிறேன் :-)
ராசுக் குட்டி, பின்னூட்டக் கவிதை நல்லா கீதுபா..
டோண்டு சார்,
// என்னுடைய ஏதாவ்து ஒரு பதிவுக்கு வந்து என்னை அடுத்த முறை ஸந்திக்க ஆசையாக இருப்பதாகப் பின்னூட்டம் போடுங்க. ஒன்றுக்கு பத்தாகப் பின்னூட்ட மழை போலியாரிடமிருந்து சீறி வருமே.
// அவர் பிரசுரிக்கப் பின்னுட்டம் கேட்குறார்.. பெருமைக்கா கேட்கிறார்!
//கடை விரிக்கிறதா... அதான் விரிச்சு எரிச்சுட்டிங்களேய்யா//
அப்படியா?
pinnotam vangaradhuku ippadi oru vali iruka?
சொல்ல மறந்திட்டேன்.. இந்த லாப்டாப் கொள்ளை அழகு.. நிஜமாவே அது உங்க மடிக் கணினி தானா? இல்லை நெட்ல சுட்டதா? ;)
//வந்து குவியும் பின்னூட்டங்களை//
முரட்டுக்காளை இது கொஞ்சம் ஓவராத் தெரியல... இது இன்னிக்கு ஒரு நாள் கூத்துதானே!
மற்றபடி உங்க எசப்பாட்டு சூப்பர்!
காயமாகாமல் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்
இப்போதைக்கு உம்மை விட்டுவிடுகிறோம். இனி தமிழ்மணத்தில் கயமை செய்து காலத்தை ஓட்டுவது உமது பொறுப்பு..
நல்ல பதிவுகளுடம் வாருமைய்யா..
அடுத்த கும்மி,
வருந்திய வாலிபரான பாலச்சந்தர் பதிவில்..
அதுக்கடுத்தது...
நம்ம தம்பிக்கு...
என்று அறிவித்துவிட்டு, அனானி கூட்டம் இன்று ஆட்டத்தை முடித்துக்கொள்கிறது இங்கே.
அ.மு.க பெங்களூர் ( ரெஜிஸ்டர்டு)
ஜோகுபாளையா,
அல்சூர் தலைமை அலுவலகம்,
பெங்களூர்.
//dondu(#4800161) said...
என்ன ராசுக்குட்டி சூட்சுமமே தெரியாது இருக்கிறீகளே. என்னுடைய ஏதாவ்து ஒரு பதிவுக்கு வந்து என்னை அடுத்த முறை ஸந்திக்க ஆசையாக இருப்பதாகப் பின்னூட்டம் போடுங்க. ஒன்றுக்கு பத்தாகப் பின்னூட்ட மழை போலியாரிடமிருந்து சீறி வருமே.//
டோண்டு சார் வருகைக்கும் உங்கள் யோசனைக்கும் நன்றி
அவ்ளோ தூரம் காஞ்சு போகும்பொது கண்டிப்பாக உபயோகப்படுத்திக் கொள்கிறேன்!
மற்றபடி உங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டால் "ஆட்டோ அனுப்பனுமா"ன்னுள்ள மிரட்டல் வரும், வெறும் பின்னூட்டமோடு நிற்காது என்று கேள்விப்பட்டேன் உண்மையா?
படம் சூப்பர். கவிதை அதவிட சூப்பர்.
சோகத்த காமெடியில மிக்ஸ் பண்ணி...ஆகா.
:)
//ராசுக் குட்டி, பின்னூட்டக் கவிதை நல்லா கீதுபா..//
பொன்ஸ் தேங்ஸ்மா...
என்ட்ர பக்கத்துக்கு நீங்க நெம்ப நாள் வராம போனதுல பொக்குன்னு போயிருந்தேன் இன்னிக்கு வந்து 50 அடிச்சிட்டீங்க
ஆமாமுங்க நீங்கதான் 50-வது பின்னூட்டமிட்டது இன்று, ஸ்பெஷல் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
மடிக்கணிணி நெட்-ல சுட்டதுதான், அதுல என் நிலையை சோகம் ததும்ப எடுத்து இயம்ப உதவியது - முரட்டுக்காளை
ஆமாம் இளா... எப்படா "No Unmoderated Comments Found " பார்ப்போம்னு ஆயிருச்சு ;-) (இது கொஞ்சம் ஓவர்தான் இல்ல)
ஆகா புதுசா வர்றவங்களும் கெட்டுப்போயிடுவாங்க போலயே... கார்த்திக் இப்டிலாம் தப்பு பண்ணக்கூடாது போலீஸ் புடிச்சுக்கும்
நன்றி சிறில் -> எம்புட்டு சோகமா சொல்லியிருக்கேன், சோகத்துல காமெடியா உங்களுக்கு நல்லா இருங்கய்யா
ஆமாம் அனானிங்களா போதும் முடிச்சுக்குவோம்! இப்போதே 20% கயமைத்தனம் பண்ணிட்டேன். 50 கமெண்ட்ஸ்க்கு நான் 10 போட்டு மொத்தம் 60 ஆகிடுச்சு
நீங்க எல்லாரும் கேட்டுக்கிட்டா மாதிரி நல்ல நல்ல பதிவுகளோடு வருகிறேன்... அடுத்தமுறை தேவைப்பட்டால் ரவிகிட்ட சொன்னா போதும்-ல! வந்திடுவீங்கதானே
இப்போதைக்கு பிரிய மனமில்லாமல் ஒரு டாட்டா!
என்னா ராசு இம்பூட்டு சோகமா கவிதை போட்டுருக்க..... சரி நீங்க ஏதாவது புது பதிவு போட்டா தகவல் குடுங்க.... ஓடி வந்துறோம்.
:-)))
கவிதை நன்றாக உள்ளது. வலைபதியும் அனைவருக்கும் உள்ள வேட்கையே யது. தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இல்லையென்றால் வருகைஎண்ணியும் நகர சிரமப்படும் :)
வானம் வசப்பட வாழ்த்துக்கள்!!
inime indha madiri kavidhai ezhuduva....
அய்யோ.. அப்ப நான் லேட்டா..?
:(((
// dondu(#4800161) said...
என்ன ராசுக்குட்டி சூட்சுமமே தெரியாது இருக்கிறீகளே. என்னுடைய ஏதாவ்து ஒரு பதிவுக்கு வந்து என்னை அடுத்த முறை ஸந்திக்க ஆசையாக இருப்பதாகப் பின்னூட்டம் போடுங்க. ஒன்றுக்கு பத்தாகப் பின்னூட்ட மழை போலியாரிடமிருந்து சீறி வருமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அது சரி.. எப்பா பெரிசு கிட்ட பார்த்து நடந்துக்க.. அவர் எழுதுறதுக்கு ஒரு பயலும் வந்து பார்க்க மாட்டீங்கிறாங்கிற எரிச்சலில் இருக்கார்.
அவர் எழுதுறது பின்னூட்டமிடக்கூட பயனற்றவை. அந்த பக்கம் போறதே தேவை யில்லாதது. இதுல இவர போய் பார்க்க வேற ஆசயா இருக்குன்னு சொல்லனுமாம்...
இவர் என்ன மல்லிகா ஷெராவத்தா?
வாங்க ராம்! வாங்க
//நீங்க ஏதாவது புது பதிவு போட்டா தகவல் குடுங்க.... ஓடி வந்துறோம்.// ஆகா இத கேக்கவே எம்புட்டு சந்தோசமா இருக்கு
உண்மைதான் மணியன், வலைப்பூ திரட்டிகள் ஒரு வரப்பிரச்சாதமே...
//அய்யோ.. அப்ப நான் லேட்டா..?//
அய்யோ அப்போ நீங்கதான் அ.ஆ ()வா?
அனிதா - கவிதை எழுதாம இந்த மாதிரி எதுனா "கடி"ச்சுகிட்டு இருக்கவா?
//இவர் என்ன மல்லிகா ஷெராவத்தா? // அட அவர்தான் போட்டோ எல்லாம் போட்ருக்காருல்ல அப்புறமும் உங்களுக்கு சந்தேகமா... எல்லாம் வயசு! ;-)
//ஆமாம் அனானிங்களா போதும் முடிச்சுக்குவோம்! இப்போதே 20% கயமைத்தனம் பண்ணிட்டேன். 50 கமெண்ட்ஸ்க்கு நான் 10 போட்டு மொத்தம் 60 ஆகிடுச்சு//
அதுக்கு பேரு நன்றி சொல்றதுண்ணே யாரோ உங்க கிட்ட கயமைத்தனம்னு தப்பா சொல்லியிருக்காங்க!! அய்யோ! அய்யோ இன்னும் சின்னப்பிள்ளயாவே இருக்கீங்க!
//அடுத்த கும்மி,
வருந்திய வாலிபரான பாலச்சந்தர் பதிவில்..
அதுக்கடுத்தது...
நம்ம தம்பிக்கு...//
வாங்க அனானிகளா! உங்க மேல எனக்கு தனி பாசமே உண்டு. லொடுக்கு கிட்ட கூட கேட்டுப் பாருங்க!
தம்பி இப்போதான் வலையுலகுக்கு வந்தா மாதிரி இருந்துச்சு, ஆனா பல சூட்சுமங்கள தெரிஞ்சு வெச்சுருக்கிங்க... ஜமாய்ங்க நானும் வந்து கலந்துக்கறேன் கும்மியில
Post a Comment