Sunday, July 09, 2006

02 : Sunday-ன்னா ரெண்டு!

தமிழ் கூறும் நல்லுலகில் நானும் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சாச்சு! தமிழ்மணத் திரட்டியில் பதியலாமென்றால் குறைந்தது மூன்று பதிவுகள் செய்ய வேண்டுமாமே...

கணக்கை ஆரம்பிக்கலாமென்று பார்த்தால் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டு பதிவுகள் வேறு வேண்டும். சரி வலைப்பூக்கள் எனக்கு அறிமுகம் ஆனதைப் பற்றி கொஞ்சம் கதைப்போம்.

தேசிகனின் வலைப்பூதான் முதல் அறிமுகம்... தலைவர் சுஜாதா-வின் படைப்புகளை படிக்க போய் அப்படியே தேசிகனின் எழுத்துக்களையும் படித்து சிலாகித்தேன். சுஜாதாவின் சாயலில் நல்ல ஓட்டமுடைய எழுத்து அவருடையது.
சுட்டி - http://www.desikan.com/blogcms/

சங்கிலித் தொடரில் பினாத்தலார் பக்கங்களில் பார்வை பட... அவருடைய எழுத்துக்களில் இருந்த நையாண்டி எனை வெகுவாக ஈர்த்தது. பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்-னு அவர் ஒவ்வொரு போட்டிகளிலும் ஃகெலிப்பதை பார்ப்பதே சந்தோசமான அனுபவம். தேர்தல் நேரத்து படங்கள் சி(ரி)றப்பு கவனம் பெற்றவை.
சுட்டி - http://www.penathal.blogspot.com/

அடுத்து குடுமியெல்லாம் வளர்த்து படித்தது "சாத்தான்"குளத்து வேதம். அடிப்படையில் நெல்லைவாசியான நான் 'நல்லா இருங்கடே'-வுக்கு ரசிகனாகவே மாறிப்போனேன். அவரோட 'கவுஜ' சங்கத்துக்கு வெளியில் இருந்து நம்ம ஆதரவு எப்போதும் உண்டு. படிக்க ஆரம்பிக்கும்போதே ஒரு புன்முறுவலை ஒட்ட வைத்துவிடும் எழுத்து ஆசாத்துடையது.
சுட்டி - http://www.asifmeeran.blogspot.com/

தேடலில் அடுத்து வந்து இளைப்பாறியது ஹரன்பிரசன்னாவின் நிழல்களில். நிறைய கவிதைகள் தலைக்கு மேலே பறந்தாலும். கதைகள் கட்டுரைகளிலும் கவிதை வாசனை வீசும் இலக்கிய படைப்புகளுக்கு சொந்தக்காரர்.
சுட்டி - http://www.nizhalkal.blogspot.com/

கொங்கு வாசம் வீசும் எழுத்துக்கு...
நல்ல பாடல் பதிவுகளுக்கு...
கோயம்புத்தூர் குசும்பை ரசிக்க... பொள்ளாச்சிக்கார 'கொங்கு' ராசபார்வை!
கவுண்டர் காமெடியை ரசிக்காத ஆள் இருக்காங்களா என்ன?
சுட்டி - http://www.raasaa.blogspot.com/

ஆணை ஆணை அழகர் ஆணையின் அழகான நடை...
கதை, கட்டுரை, கவிதையிலும் நையாண்டி கலந்த நல்ல நடை!
மட்டுறுத்தல் பற்றி தொழில்நுட்ப ரீதியிலும் ஆழமாக அலசுகிறார்கள்.
வ.வா.சங்கத்திலும் உறுப்பினராம்
சுட்டி - http://poonspakkangkal.blogspot.com/

தோடா... தமிழ்மணத்தில் பார்த்தால் தெரியபோகுது, இல்ல இங்க சுட்டினா தெரியபோகுது. நீயே புச்சு... இங்க வலைப்பூவிலே பழம் தின்னு கொட்டைபோட்டவங்கள ஏதோ அறிமுகப்படுத்தற மாதிரி அல்ட்டிக்கற அப்டீன்றீங்களா... இந்த வலைப்பூவுக்கு நானும் புதுசு என் நண்பர்களும் புதுசு அதான் நான் ரசிச்ச விஷயங்களை இங்க பகிர்ந்துகிட்டேன். மேலே சுட்டின யார்கிட்டயும் அனுமதியும் வாங்கல... இதெல்லாம் தப்புன்னா பின்னூட்டத்தில் பின்னியெடுங்கள் அல்லது தனிமடலிலும் தாளிக்கலாம்!

அதுவரைக்கும் வ்வ்வ்வர்ர்ர்ட்ட்டா!

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

என்னாச்சு ராசு? மத்த இடுகை எல்லாம் காணோம்...?

ராசுக்குட்டி said...

They will soon appear, I am numbering my posts hi hi...