Saturday, July 08, 2006

01 : வணக்கமுங்க... வணக்கம்

தமிழில் எழுதுற சந்தோசமே தனிதான்... அதுவும் எ-கலப்பை மாதிரி எளிமைபடுத்திபுட்டா எழுதுறதுக்கு யாருக்கு கசக்கும், அதான் நானும் வருவேன் ஆட்டய கலைப்பேன்னு வலைப்பூ உலகத்துக்கு வந்துபுட்டேன்!

வந்துட்ட சரி... என்ன எழுதி கிழிக்க போறன்னு கேக்கீக! இப்பதான் கலப்பய புடிச்சி உழுதுட்டா எல்லாமே 'எளக்கியம்'னுதாங்கல்லா... ஆனா நம்ம அந்த காலத்து (1990) ஆறாங்கிளாஸ். அதுனால நம்ம எழுத்துல இலக்கியத்த விடுங்க 'எளக்கியம்' கூட இருகாதுங்க அதுக்கு நான் உத்தரவாதம்!

எனக்கு கொலை செய்வதற்கு நேரம் இருப்பதால் எழுதுகிறேன்... உங்களுக்கும் நேரத்தை கொலை செய்ய ஆசை இருந்தால் மட்டுமே படிக்க சிபாரிசிக்கிறேன்!

இப்போதைக்கு வ்வ்வ்வர்ட்ட்ட்டா...