Thursday, February 08, 2007

65 : சொல்லாத வார்த்தை - 2

Photobucket - Video and Image Hosting

உன் வரவுக்காய் காத்திருக்கையில்
நுனிக்கிளைகள் இலை இழக்கும்

என் வரவுக்காய் காத்திருக்கையில்
உன் விரல்கள் நகமிழக்கும்

என் பேச்சு இடறும் போதெல்லாம்
தடுக்கிவிடுவது காதல்தான்
என்பதை நீ அறிவாய்

என்னைப் பார்க்கும் போதெல்லாம்
உன் கண்கள் பிரகாசிக்கும்...
ஒளி தந்தது காதல்தான்
என்பதை நான் அறிவேன்

மனிதம் வெளிப்படும்போதெல்லாம்
நல்ல நட்பு உருவாகிறது
புனிதம் அடையும் நட்பு
காதலெனும் கருவாகிறது

புண்படக் கூடாது நட்பென்ற பயத்தில் - அதன்
புனிதத்துவத்தை அடையாது போவோமோ?

எவனோ சொன்னது போல்
ஊமைகள் காதலர்களாய் இருக்கலாம்
காதலர்கள் ஊமைகளாய்...?

இந்தக் காதல் கண்ணாமூச்சியில்
இருவரது கண்களையும் கட்டிக் கொண்டோமடி!

வழக்கமாய் சந்திக்கும் இடம்
சற்று தாமதமாய் நான்...
(தொடரும்...)

No comments: