63 : பக்கத்துவீட்டில் ஒரு செல்லப் பிசாசு!
என்னைப் பார்க்க வரும்போதெல்லாம்
ஏதாவதொன்றை விடுத்துச் செல்வாய்
விட்டதை எடுக்க வருவாய்
வேறொன்றை வேண்டுமென்றே விடுவாய்
கைக்குட்டை விடுவாய் - பின்
கைக்குட்டை எடுத்து கைப்பை மறப்பாய்
கைப்பை எடுத்து கண்ணடித்து மறைவாய்
அர்த்தமில்லாமல் வருவாய்
அத்தை என்றழைப்பாய் - என்
அன்னை குழம்புகையில்
எனைப் பார்த்து சிரிப்பாய்
உள் அர்த்தமொன்று வைத்து!
ஓர் நாள் உன் கூந்தல்
பிடித்திழுத்துக் கேட்டேன்,
ஏய்! எடுக்க வருகிறாயா
ஏதேனும் விடுக்க வருகிறாயா?
ஏன் இரண்டிற்கும்தான்
எனை விடுத்து
உனை எடுக்க
இயம்புகிறாய் கன்னம் சிவக்க!
10 comments:
//கைக்குட்டை விடுவாய் - பின்
கைக்குட்டை எடுத்து கைப்பை மறப்பாய்
கைப்பை எடுத்து கண்ணடித்து மறைவாய்//
கொஞ்சம் கொசூவத்தி சுத்தி பாத்தெனுங்ணா..
கிளு கிளு கில்பான்சியா இருந்துச்சி!
எத்தன நாளிக்குதான் இப்படியே ஏங்கிட்டு இருக்கறதுன்னு தெரில
அட கொசுவத்தி சுத்தற அளவுக்கு குடுத்து வச்ச ஆளா நீங்க... நாமெல்லாம்... காத்துலயே கற்பனைக் குதிரைய தட்டி விட்டுட்டு இருக்கோம்!
அதான் சீக்கிரமே இந்தியா போறீங்க போல இருக்கே!!
இதுக்கே கிளு கிளு கில்பான்சியா... ரொம்பத்தான் காஞ்சு போயிருக்க போல... ஆமா ஏன் ஏங்கிகிட்டே இருக்க...இறங்கிரு!! அவ்ளோதானே
//இதுக்கே கிளு கிளு கில்பான்சியா... ரொம்பத்தான் காஞ்சு போயிருக்க போல... ஆமா ஏன் ஏங்கிகிட்டே இருக்க...இறங்கிரு!! அவ்ளோதானே//
அண்ணனா நீயி?
சரி விடு ரொம்ப நல்ல அண்ணன் :))
//அதான் சீக்கிரமே இந்தியா போறீங்க போல இருக்கே!! //
அண்ணே அது நானில்ல
நம்ம கப்பி பயலுக்கு வெச்ச தட்டி!
ஓ கப்பி பயதான் போறதா...
இதுக்குத்தான் தட்டிய பாத்துட்டே எந்த முடிவுக்கும் வந்துறக் கூடாதுன்றது... முழுசா படிக்கணும்ன்றது! (அட எனக்குத்தான் சொல்லிக்கிட்டேன்)
யாருப்பா அந்த அண்ணன் தம்பிக்கு தப்புத்தப்பா ரோசனை சொல்றது...
தம்பி அவசரப் படேல்!!
Anney unga kavithikku Aethavathu Mun Anubavam undaa. Aanalumkavithai super ney.nalla eluthunga.
Kumar from tirupur.Vijayamaharaj friend ney naanu
Hi na I like your all poets.Especially this i am amazing.I am your brother's classmate na.I am so amazing .but one doubt Appadipaata thambi ku eppadi intha mathiri annan. Unga thambiyum eluthuvan but not upto this level.
Hema
Coimbatore
அற்புதமான கவிதை.... வாழ்த்துக்கள்!!!
Post a Comment