எமக்கு தொழில் எளக்கியம், கவுஜ Cutஉரை!
மனதில் தோன்றிய கவிதையொன்றை
காகிதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன்
மை தீர்ந்துபோன பேனா வெள்ளையாய் எழுதியது
எடுத்த காரியம் முடித்துவிடலாமென்று
பேனாவிற்கு மை நிரப்புகையில்
அச்சமூட்டுவதாயோ, ஆச்சரியமூட்டுவதாயோ
பின்னிருந்து நீ அணைத்ததில்
காகிதமெங்கும் சிதறியது மை
கவிதை... ஓவியமாகிப்போனது!
Posted by ராசுக்குட்டி at 2/01/2007 09:38:00 AM
Labels: ஓவியம், கவிதை, மன்மத மாதம், ராசுக்குட்டி
4 comments:
புரிகிறது ராசுக்குட்டி! வாழ்த்துக்கள்!
காதல் மாதத்தில் முதல் போணியா!
பிள்ளையார் சுழி!
ஆமாம் சிபி... இந்தப் பதிவுக்கு நீங்கதான் முதல் போணி!
தம்பி... இந்த சுழி தானே வேணான்றது. (சுழின்னா சேட்டை-ன்ற அர்த்தத்துல எங்க ஊர் பக்கம் அடிக்கடி சொல்லுவோம்!)
Post a Comment