67 : கள்ளச்சந்தை காதல்
என் காதல் சொல்லும்வேளையில்
கண்கள் படபடக்க நாணக் கோலமிட்டு
நானும்தான் எனச் சொல்லாதே
பரவசம் கொஞ்சம் பதுக்கி வை
உற்சாகம் கொஞ்சம் ஒதுக்கி வை
பதுக்கி வைக்கும் பொருளுக்கே மதிப்பதிகம்
கள்ளச் சந்தையில் மட்டுமல்ல
காதல் விளையாட்டுக்கும் இது பொருந்தும்
எப்படிச் சுடுவான் இரவுச்சூரியன்
எனக்கும் தெரியவேண்டும்
தாடி வளர்த்து - காதல்
தாகம் மிகுந்து திரிய வேண்டும்
கண்களில் வந்துன்முகம் ஒட்டிக் கொண்டார்ப்போல்
பார்ப்பதிலெல்லாம் உன் உரு தெரியவேண்டும்
என் பகலெல்லாம் சுருங்கி
இரவுகள் நீள வேண்டும்
கசங்கிய காகிதமாய், காதல் ஜுரமேறி - உன்
காலடி வந்து வீழ்வேன்
அள்ளியணைத்துச் சொல்
கருணை பொங்க
காதலாய் என்றென்றும் வாழ்வேன்!
2 comments:
aenungo neenga thenungo. unga padipugal superungo.
Ippadikku Gowndan senthil kumar.
Contact me at senthil.shiningin@gmail.com
Note: Try to write Two line poets.Because i love them
:-)அழகாய் இருக்கிறது..
மிகவும் ரசித்தேன்..
நேசமுடன்..
-நித்தியா
Post a Comment