Friday, June 30, 2023

68 : ஒரு துளி வீரம்!


உன் கண்கள் பார்த்தே
காதல் வளர்த்த நாளெல்லாம்
கனவைப் போல் இருக்கிறதடி

என் நாவென்னும் வாளோ
கண்ணீர் குருதி பாராமல்
சுழலுவதை நிறுத்துவதில்லை

சில சமயம் பார்த்தபின்னும்

உன் கோபக் கண்களில் புன்னகை கீற்றொன்றை
காண்பதற்கு கோமாளியாய் வேஷமிட்டிருக்கிறேன்
முன்னொரு வசந்தத்தில்

கொஞ்சமிருக்கும் உன் சுயத்தையும்
வடித்து விடும் நோக்குடனே
பாய்கிறது என் வார்த்தை அம்புகள்

உன் முகம் வாடினாலே
உருகிப் போய்
குழந்தையாய் பாவித்து
கொஞ்சியதெல்லாம் நானேதானா

ஆண்மையின் ஆணவமும் - என்
ஆளுமையின் இயலாமையும்
உறைந்து நிற்கிறது
ஒரு துளியாய்
உன் கண்ணில்

5 comments:

Anonymous said...

தலைப்பு புரியல...யாருது வீரம்னு சொல்ரிங்க..

ராசுக்குட்டி said...

சுரேஷ் ஒரு துளி வீரம் (ஆண்மகனுக்குத்தான்) இருந்திருந்தாலும் இந்தத் துளி வந்திருக்காது என்பது என் கருத்து.

Anonymous said...

அட போங்க ராசு.இந்த காலத்து பொண்ணுங்கல கூட அடக்க முடிஞ்ஜா அது தான் வீரம்

Anonymous said...

என்ன ராசு பதிலே காணோம்
சுரேஷ்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in