Friday, June 30, 2023

66 : சொல்லாத வார்த்தை - 3

Photobucket - Video and Image Hosting

வரமாட்டாயோவென பயந்தேன் என்றாய்
புரியாமல் புருவம் உயர்த்தினேன்

கண்கள் அழுதது போலிருந்தது
புன்னகையால் உடனே பூசி மழுப்பினாய்
இருந்தும் ஒரு துளி உருண்டோடியது

துடைக்க வந்த விரலை
தூரத்திலேயே நிறுத்தினாய்

அந்த
மௌனம் ஒரு பேரிரைச்சல்
நொடி ஓர் ஊழிக்காலம்

கைப்பை திறந்து
"என் மணப் பத்திரிக்கை" என்றாய்
வாங்கத் தயங்கிய என் கையில்
உருண்டோடியது உதிர்ந்தது

நொறுங்கிய இதயத்தில்
ஆணின் அழுகையாய்
கசிந்தது காதல்

நீ வந்து சென்றபோதெல்லாம்
பூக்கள் முளைத்த புற்கள் - இன்று
பொசுங்கிப் போயிருந்தன

ஏன் என்ற கேள்வியொன்று
நெஞ்சாங்கூட்டை தாண்ட வில்லை
வீண் என்று நினைத்தாயோ
நொடி தாண்டி, நீயங்கே இல்லை

காலடியில் ஓர் காகிதம்
என் இதயம் போலே படபடத்தது

எடுத்தேன் ; லேசாய் மலர் வாசம் கசிந்தது
பிரித்தேன் ; ஒரு கவிதை இருந்தது

உறக்கம் பறித்த காதல் பற்றி...
உன்னைத் திருடிய என்னைப் பற்றி...

(முடிந்தது!)

எப்பவோ சோகத்துல எழுதினது! இப்போ பிரிச்சு வைக்க மனசே இல்லைங்க... யாராவது இன்னும் கொஞ்சம் தொடர்ந்து 'சுபம்' போடுங்களேன்...

3 comments:

SP.VR. SUBBIAH said...

என்னங்க ராசுக்குட்டி? எப்பிடியிருகீங்க சாமி....? இடையில ரெம்ப நாளா காணலியே சாமி?

Anonymous said...

Anney unga kavithiyellam top ney. Sontha anubavamo. Anyway very good. Ungha thambi thaan Intha address forward panninaru

Anu said...

hello raj...please continue writing..